Tuesday 13 December 2011

 தென்னூர் குருநிலை பள்ளி முதல் வகுப்பில் அடம் பிடித்து எப்படியெல்லாம் போகாமல் இருக்க முடியுமோ அத்தனியும் பண்ணி.. ஆனாலும் அப்பாவின் வலுவான கைகளின் அன்பான தர தர
இழுத்தல்---- நாற்பது மாணவர்களுடன் சேர்ந்து அறம் செய்ய விரும்பு என்று அடி வையற்றிலுருண்டு ஒலித்து.. ஒன்று முதல் பத்து வரை எண்ணி வீட்டு மணி அடித்தவுடன் சின்ன மண் திட்டில் மரத்தில் இருந்து விழுந்த பன்னீர் காயை கால் பந்தாடி வீட்டுக்கு சென்றது..

ஒழுங்காய் படிக்க வேண்டுமே என்று அம்மா அந்த நாளிலேயே எவர் சில்வர் டம்ளர் லஞ்சம் கொடுத்தது.



No comments:

Post a Comment