Friday 30 November 2012

அப்புட்டுவின் அகால மரணம்

நேற்று மாலை இல்லம் சென்று அடைந்த பின்னர் அறிந்த அதிர்ச்சி செய்தி
நாற்பதின் அருகில் இருந்த அப்புட்டுவின் அகால மறைவு. ஒரு புறம் பெற்ற அன்னை தந்தை மறுபுறம் மனைவி . இரு இளம் பெண் குழந்தைகள் . இவர்களின் எண்ணங்களை, கனவுகளை ஏக்கங்களாய் மாற்றி எழுதி இறந்து விட்டார்.
வெகு பல ஆண்டுகட்கு முன்பு மும்பை இல்லத்திற்கு குடும்பத்துடன் மகிழ்ச்சியாய்
சிறிது நேரம் குலவிய நல நேரங்கள் எண்ணக் குதிரைகளில் ஓடுகிறது.

கவிஞர் கண்ணதாசன் " பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை" என்ற பாடல்
வரிகள் மற்றும் அதே பாடலில் "நமக்காக நம் கையால் செய்வது நன்று " என்ற வரிகளும் நினைவில் வருகிறது.

ஆறுதல் சொல்ல தட்டச்சின் பொத்தான்களை தட்ட மனம் ஒவ்வவில்லை. யாருக்கு உண்மையாய் ஆறுதல் சொல்ல இயலும். எதிர்பார்த்த நிகழ்வு எனில் மனம் ஒப்புக்கொள்ளும். உலகாளும் இறைவனிடம் உருகி வேண்ட முடியும்.
உரிமையாய் கோபம் கொள்ள முடியுமா. சம்பிரதாயத்திற்காக துக்கம் கேட்க பவானி  அக்காவிடம் பேச எப்படியோ இருக்கிறது..
நல்லதை நினைத்து நல்லதே நடக்க எந்நாளும்  சிந்திப்பவர்க்கு நன்மையை அதிகஅளவில் அளித்திடு இறைவா. இது தான் உன் மேல் உலகு வைக்கும் நம்பிக்கை மிகுந்திட நல் மந்திரம். ஏற்பதும்  ஏற்காததும் உன் இச்சை.

Thursday 8 November 2012

தீபாவளி வாழ்த்துக்கள்


 விளக்கொளி விழா வாழ்த்துக்கள் 
 வாழ்வில் வளம் பல வகையாய் வந்திட
வினைகள் வறுமை விரைவில் விலகிட
விளக்கொளி திருநாள் தன்னில் மூலம் தன்னை 
முதல்வனுக்கு உரைத்த முருகன் தாள் 
பணிந்து வாழ்த் துதும் யாமே.   

அன்புடன்

வெற்றி இளவல் (ஜெயக்குமார்)
காலைகதிரோள் (உஷா )
அறிவுடையோன்  (விவேக்)
பணிவுடையோன்   (விநீத் )  

Thursday 16 August 2012

தந்தை வழிப் பாட்டி-நினைவலைகள்

இந்த பதிப்பு எந்தன் தந்தை வழிப் பாட்டி பற்றிய நினைவலைகள்.
நார் மடிப் புடவையை வழித்த தலையின் மேல் மூடிய வண்ணம் அணிந்து பள்ளிஅக்ராஹாரத்து பாட்டனாரின் வீட்டில் தனி அரசு நடத்தி வந்த நாட்கள். பாட்டனாரின் மறைவுக்கு பின்னர் நல நிலயில் இருக்கும் நான்கு மகன்களிடமும் அன்பும் பாசமும் கொண்ட ஒரே மகளிடமும் நிலையாய் இல்லாமால் பள்ளிஅக்ராஹாரத்து வீட்டில் மிகுதியான காலத்தை கழித்து அறுவடை முடிந்த பின் உள்ள சில வாரங்கள் எங்கள் எல்லோர் வீடுகளுக்கும் வந்து செல்வார்கள். அந்த வருகையின் எதிர்பார்ப்புகள் .. ஆம் புதிய நெல் அறுத்த பச்சை அரிசி , நல்ல பயறு இவை  சிறிய  சாக்கு பைகளில்.... எங்கள் வீட்டில் இறங்கிய உடன் பலா பலகையை எடுத்து பய்ரினை உருட்டி கற்கள் நீக்குவார். அதன் பின்னர் எந்திரத்தை நன்கு ஆய்வு செய்து சரியான படி இருந்தால் பயரினை  அரைத்து பொடி செய்வார்கள். ஒரு புறம் அன்னையாரின் அனுபவத்தில் சேமித்த வீட்டு  வெண்ணை உருக்கப்பட்டு புதிய நெய்யாய் மணக்கும். பாட்டியின் வரவிற்கென்றே காத்திருக்கும் மண்டை வெல்லம்...
நன்கு பொடி செய்த பயத்த மாவுடன், மணக்கும் நெய்யும் இனிய வெல்லமும் இணைந்து  வரும் கலவையை இளம் சூட்டில் சீராக உருண்டை செய்து முதலில்
உம்மாச்சிக்குஅர்ப்பணம் செய்தபின்
குட்டியாய் இருக்கும் எனக்கு முன்னுரிமை- தின்னத் தருவதில்.

காலங்கள் எதுவாக இருக்கட்டும்.. காலை நான்கு மணிக்கு நிச்சயம் விடியல். நல்ல filter காபி ... சூரியன் உதிக்கும் முன்பே குளித்து உயரத்தில் கம்பு கொடியில் உலரும் நார் மடி
புடவை உடுத்தி நெற்றியில் திருநீறணிந்து கழுத்தில் அணிந்த ஸ்படிக மாலையை கையில் எடுத்து இறைவனை நினைத்து ஒரு மணி ஜெபம்.. "மடி மாறாத என் வழி தனி வழி" என்று அந்த நாட்களிலேயே தனி பாட்டை வகுத்து ஆனால் இளைய தலைமுறையின் உணருவகளுக்கு மதிப்பளித்து வாழ்ந்தவர். எல்லா பிராமணர் குடும்பங்களில் மணமான பெண்கள் 9 கஜம் புடவை உடுப்பது என்பது எல்லோரும் ஒப்புக்கொண்ட மரபு . எங்கள் அன்னையாரின் வேண்டுதலுக்கு செவி மடுத்து முக்கிய நாட்கள் தவிர மற்ற நாட்களில் எளிதாய் உடுத்தும்
6 கஜம் உடுத்திட இணக்கம் தெரிவித்தது.. இது எனக்கு செவி வழி வந்த செய்தி.

அவர்களின் வாழ்க்கையின் தாக்கம் மிக அதிக அளவில் எங்கள் அன்னையிடம் இக்காலத்தில் காண முடிகிறது. அகவை எண்பதுக்கும் மேல் ஆகியும் தன மக்களுடன் வாழாமல் தன தினப்படி வேலைகளை தானே திறம்பட செய்து- யாக்கை இயன்றாலும் இயலா விட்டாலும்.....   அனைவரின் நலனில் அக்கறை கொண்டு வாழும் உயிர்.
 
  

Wednesday 9 May 2012

பூணல் வாழ்த்து மடல்

பூணல் வாழ்த்து மடல் 

தன் ஒளி தண்ணொளி தருமிகு கோள்கள் தன்னுள் அடக்கிய
தரத்திற் தங்கமிநை  மாப்பிள்ளை "ரவிச்சந்திரன்"   

புதுக்கோட்டை பீடமம்ர் புவியாளும் அன்னை பெயர் பெற்ற 
பெட்டகமே சொத்தே சோதரி "சத்யா"

இல்லறத்தின் இனிய பயன் இளவல் - போதி மரத்தடி 
ஞானம் பெற்ற புத்தன பெயரோன் "சித்தார்த்"

முப்புரி நூலணி விழாவில் மாமன் மூவர் 
முப்புரம் எரித்த முக்கனோர்க்கே "மூலம்" 
முதலில் உரைத்த எம் குலக் கடவுள்
 அழகன் முருகன் அருளால் "அறவோன் அந்தணன் "
 ஆகு என வாழ்துதும் 
 வாழிய வளமுடன் வாழிய உயர்வுடன் 

Thursday 12 April 2012

நந்தினி வருட வாழ்த்துக்கள்


மேதினியில் மேன்மை மிக்க நலன்கள்
மலர்ந்திடவே மூலம்  தன்னை
முதல்வனுக்கு உரைத்த
முருகக் கடவுள் அருளை இறைஞ்சி
நந்தினி ஆண்டு நல்வாழ்த்துக்கள்

அன்புடன் வெற்றி இளவல் (ஜெயக்குமார்)





Sunday 26 February 2012

கடந்த சில வாரங்களின் நிகழ்வுகள் : குடும்பத்தில் உட்ட்றார் உறவினர்களின் இறைவனடி சேர்ந்த தொடர் நிகழ்வுகள். முதிர்ந்த
பழுத்த இலையை ஒத்த மாமாவின் (இளைய) மறைவு. பின்னர் எதிர்பாராத விதமான இரண்டு மறைவுகள். பேபி மாமா மகன் கண்ணனின் குளியல் அறையில் விழுந்து தலை  காயத்தால் இறந்த செய்தி. சென்ற வார இறுதியில் கல்யாணி அக்காவின் அகால மரணம்.
இதகிடையில் உஷாவின் வீட்டில் முதிர்ந்த தொன்நூர்டு எட்டு வயது இந்திரா அம்மையின் ஈயற்கை எயய்தல்.

அனைவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள். இறைவனின் முடிவுகளுக்கு ஞாயம் தேட நம்மால் இயலவே இயலாதா?  வாழ்வின் முழு நிலையை அனுபவித்த மனிதர்கள் பலர் பெயருக்கு உயிரை உடலில் வைத்து கொண்டு நடைப்பிணமாய் காலத்தை கடத்திகொண்டிருகின்றனர். அவர்களை மரணம் தழுவாததன் காரணம் கணிக்க இயலவில்லை..

 

Sunday 5 February 2012

எல்லை தெய்வங்களின் திருவிழாக்கள்: 
தென்னூர் ஆட்டு மந்தை ஆண்டின் வசந்த காலம் முடிந்து ஏலம் வெய்யில் ஏறும் கோடை காலம்.. ஆண்டு முழுவதும் அசமஞ்சமாய் தூங்கி வழியும் மந்தை மெருகு  ஏறும் நேரம்.
எங்கள் வீட்டின் பின்புறம் செழித்து வளரும் வயல் காடிர்கிடையில் சல சல என்று ஓடும் ஆற்றின் கரையில்  .... ஸ்மசான பூமிக்கு மிக அருகில் (இந்த நினைவுகள் சுமார் நாற்பத்து ஐய்ந்டு ஆண்டுகட்கு முந்தையது) கோபுரமற்று திறந்த வெளியில் அமைந்த உக்கிர காளி அம்மன் கோயில். 

அங்கிருந்து தென்னூர் மந்தைக்கு அம்மனை மூன்று நாள் திருவிழாவிற்கு அழைத்து வருவார்கள். அது இரவு பத்து மணிக்கு பின்னர் நிகழும். இந்த "காளி வட்டம்" விழாவின் தனி சிறப்பு..  சிலம்பம் பொய்கால் குதிரை கரக ஆட்டம்  ஆகிய நாட்டுப்புற கலைகள் வெளிப்பாடு.. பனை ஓலைக்கு சமமான பொருளால் செய்யப்பட்ட அம்மன் உருவம்.. புலி வேஷம் கட்டி கூரான ஆயுதம்  கொண்டு தர்காப்ப்பு. அதை விட வேடிக்கை புலி வாலை படித்து உறும வெய்து பார்ப்பது.

இறங்கிய மறு நாள் ஆடு பலி.. இது என்னால் ஆண்டு முதல் இன்று வரை ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று..  எந்த தெய்வமும் சிருஷ்டியை காத்து உய்விக்க தோண்டிர்யா ஒன்று என்றால் அது மிகையன்று.
நம் மனித குளம் வாழ வேண்டி ஒன்றும் செய்ய இயலாத உயிர்களை பலி கொடுப்பது என்ன ஞாயம்.

"குட்டி குடிக்கும்" அந்த நாளில் தான் மக்கள் கூடம் நிறைந்து இருக்கும். இந்த திருவிழாவின் ஒரு நல்ல பாடம்.பிற மதங்களின் உணருவகளை மதித்து  நடப்பது. மந்தையின் எதிரில் அமைத்த மசூதி வழி செல்கையில் "தாரை தப்பட்டை வாசிப்பதை நிறுத்தி அந்த இடத்தை கடந்த பின் தொடரும் பழக்கம். விழாவில் எல்லோருடன் ஒன்றாய் கலந்துகொள்ளும் முகமதிய சகோதரர்கள்..

இருபத்து இயந்து ஆண்டுகள் பின் ஒரு முறை காளி கோயில் வழி சென்றால்.. நிறைய உரு மாற்றங்கள்... நம் முன்னேற்றத்தின் பிரதிபலிப்புகள்.


         
  
 ..